கொழும்புத் துறைமுகத்துடன் உல்லாச கப்பல் இணைக்கப்படவுள்ளது
முதன் முதலாக உல்லாசப் பயணிகள் கப்பல் சேவை ஒன்று கொழும்புத் துறைமுகத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் சேவை மூலம் ஒஸ்ரியா ஜேர்மனி மற்றும் சுவிஸ்சர்லாந்து நாடுகளை சேர்ந்த 4 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை கொழும்புத் துறைமுகத்திற்கு சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவதில் ஆர்வம் காட்டும் நிலையில் கொழும்பு துறைமுக பயணிகள் இறங்கு துறையின் தரத்தை உயர்த்த கொழும்பு துறைமுக அதிகார சபை தீர்மானித்துள்ளது.