|
சம்பந்தரை மீறி எதுவும் நடக்காதாம். கூட்டமைப்பு எடுத்த தீர்மானம் இழுபறி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் ஒன்றிணைந்து முன்மொழிந்த ஆரோக்கியமான முடிவுகளை தனது வழமையான பாணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இழுத்தடித்துக் குழப்பியிருக்கின்றார்.(மேலும் படிக்க)
திருமலையில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!திருகோணமலை முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் நேற்று மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.49 வயதான முகம்மது நஸீர் என்பவரே மின்னல் தாக்கி உயிரிழந்தவராவார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் வாகன திருத்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.(மேலும் படிக்க)
பசுக்கன்றை காப்பாற்ற முற்பட்ட யுவதி கடுகதி ரயிலில் மோதுண்டு பலி! வவுனியாவில் சம்பவம்!
வவுனியாவிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கடுகதி ரயில் மீது மோதி யுவதியொருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் பண்டாரபுளியங்குளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. (மேலும் படிக்க)
தேசியக் கொடியை ஏந்தியத்திற்கு மன்னிப்புக் கோர வேண்டிய தேவையில்லை!– இரா.சம்பந்தன்ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை ஏந்தியது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.(மேலும் படிக்க)
மீள்குடியேற்றம் நிறைவுறும் வரை இலவச மின்னிணைப்பு வழங்கப்படுமாம்!
மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் முழுமையான மீள்குடியேற்றம் நிறைவடையும் வரை இலவச மின்னிணைப்பை பெறுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளார். (மேலும் படிக்க )
கனேடியப் பிரஜை ஒருவர் பரந்தன் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்!கனேடியப் பிரஜை ஒருவர் பரந்தன் பகுதியில் வைத்து இனந்தெரியாதவர்களால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச்சம்பவம் கடந்ந இரவு 9 மணியளவில் பரந்தன் குமரபுரம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.(மேலும் படிக்க)
போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளர் கைது!வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக்கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீதுவ லியனகேமுல்ல பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மத்திய நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.(மேலும் படிக்க)
பிரான்ஸ் பாரிஸில் மிக எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு!சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு வெளிநாட்டவர்களின் நிகழ்வுடன் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை பிரான்சு பாரிஸ் நகரில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.பாரிஸ் நகரின் Denfert Rochereau பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி பாரிஸின் பிரதான வீதிகளின் ஊடாக நகர்ந்து Bastille நினைவுத் தூபிப் பகுதியைச் சென்றடைந்தது.(மேலும் படிக்க)
புலிகளுக்கு கருவிகளை கொள்வனவு அமெரிக்காவில் 15 ஆண்டு சிறை!
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உபகரணக் கொள்வனவில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கனேடிய குடிமகனான றமணன் மயில்வாகனத்துக்கு 15 ஆண்டு கால சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க நீதித்துறை தீர்மானித்துள்ளது. (மேலும் படிக்க)
யாழ் மே தின ஊர்வலத்தில் தமிழீழ தேசிய கொடி பிடித்த நபரும், தமிழீழ சட்டை போட்ட நபரும் - நடந்தது என்ன?யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் மே தின ஊர்வலம் கோயில் வீதியூடாக வந்து கொண்டிருந்தவேளை, ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் புலிக்கொடியை விரித்துக் காட்டியவாறு ஓடிச்சென்று மறைந்துள்ளார்.(மேலும் படிக்க)
ஈ.பி.டி.பி க்கு தாவினார் ரெலோ விந்தன்.
ரெலோ கட்சியின் உறுப்பினரும், யாழ் மாநகரசபை உறுப்பினருமாகிய விந்தன் அவர்கள் ஈ.பி.டி.பி க்கு கட்சி தாவிய விடயத்தை யாழில் இருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளது. (மேலும் படிக்க)
அடே சக்கிலியா?... இராசதுரையை பார்த்து சிவாஜிலிங்கம்! தமிழ் தேசியத்தின் சாதிவெறி கண்டு சந்தி சிரிக்கிறது..தந்தை செல்வநாயகம் அவர்களின் நினைவஞ்சலிக்கூட்டம் யாழில் நடந்தது. அதில் முன்னாள் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான செல்லையா இராசதுரை அவர்களும் கலந்து கொண்டிருந்தார். (மேலும் படிக்க)
|
தென்கொரியாவில் உயிரிழந்த இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!தென்கொரியாவிலுள்ள களியாட்ட விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தென்கொரியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.(மேலும் படிக்க)
கடற்படை வீராங்கனையை சுட்டுவிட்டு கடற்படை வீரர் தற்கொலைகடற்படை வீராங்கனையொருவரை துப்பாக்கியால் சுட்ட கடற்படை வீரரொருவர் பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருகோணமலை கடற்படைத் தளத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.இன்று பிற்பகல் 1.30 மணியளவில் டொக்யார்ட் கடற்படைத் தளத்தில் பணியாற்றும் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர். சிறிலங்கா கடற்படையின் பெண் அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொன்றார்.(மேலும் படிக்க)
இலங்கையில் மீண்டும் பிரச்சினைகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது: கோத்தபாயபயங்கரமான ஆயுதக்குழு ஒன்றை தோற்கடித்ததன் மூலம் இலங்கையில் சமாதானம், விடுதலை மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடிந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மே 19 ஆம் திகதியன்று இந்த தடவை விடுதலைப்புலிகளை வெற்றிக்கொண்ட மூன்றாவது வருட கொண்டாட்டத்தை நடத்தவுள்ளது.(மேலும் படிக்க)
கொழும்புத் துறைமுகத்துடன் உல்லாச கப்பல் இணைக்கப்படவுள்ளதுமுதன் முதலாக உல்லாசப் பயணிகள் கப்பல் சேவை ஒன்று கொழும்புத் துறைமுகத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(மேலும் படிக்க)
தமிழருக்கு நியாயமான அரசியல் தீர்வு தேவை! ஹிலாரியிடம் விளக்குவார் கிருஷ்ணாஇலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காணும் விடயத்தில் எடுக்கவுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா விளக்கவுள்ளாரென இந்திய உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.(மேலும் படிக்க)
கனகராயன்குளத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!நெடுங்கேணியைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கி வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கனகராயன்குளம், வெல்லக்குளம் பிரதேசத்திலேயே மேற்படி துப்பாக்கியை வைத்திருந்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.(மேலும் படிக்க)
பாணன் பாடிய மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினரின் கள்ளக்காதல் அம்பலம்!மாநகரசபையின் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் உறுப்பினர் ஒருவர்
கள்ளக்காதலில் ஈடுபட்டு வரும் விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. பழம்பெரும் தமிழ் கட்சி ஒன்றின் உறுப்பினரான இவர் தனது மகளின் வயதை ஒத்த இளம் யுவதியை ஆசை காட்டி (மேலும் படிக்க) யாழ்.நாகவிகாரையில் துப்பாக்கிச் சூடு - 2 சிறிலங்கா இராணுவத்தினர் பலி!யாழ்ப்பாண நகரில் இன்று காலை இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க )
வடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)
அமெரிக்கா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கனடாவில் தமிழ் மக்களை சந்தித்து பேசினர், அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், வட கிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.(மேலும் படிக்க)
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கிடைத்தும் தந்தையுடன் வாழமுடியாத இலங்கைத் தமிழ் சிறுவன்!காலவரையறையின்றி தமது தந்தையை பிரிந்து நிற்கும் 5 வயதான இலங்கை தமிழ் சிறுவன் ஒருவன் குறித்து அவுஸ்திரேலிய செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.(மேலும் படிக்க)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் யாழில் மாபெரும் கூட்டு மே தின நிகழ்வு!சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வரலாற்றில் முதற்தடவையாக ஒன்றிணைந்து கூட்டு மே தின நிகழ்வை யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தவுள்ளன. (மேலும் படிக்க)
|
|