போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளர் கைது!
வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக்கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதுவ லியனகேமுல்ல பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மத்திய நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சைப்பர் இஸ்ரேல் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி நாட்டில் 58 பேரிடம் குறித்த சந்தேகநபர் நிதி மோசடி செய்துள்ளார்.
இவர் சுமார் 4 கோடி ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.