அடே சக்கிலியா?... இராசதுரையை பார்த்து சிவாஜிலிங்கம்! தமிழ் தேசியத்தின் சாதிவெறி கண்டு சந்தி சிரிக்கிறது..
தந்தை செல்வநாயகம் அவர்களின் நினைவஞ்சலிக்கூட்டம் யாழில் நடந்தது. அதில் முன்னாள் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான செல்லையா இராசதுரை அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர; சிவாஜிலிங்கம் அவர்கள் செல்லையா இராசதுரை அவர்களை கூட்டத்தில் வைத்து திட்டித்தீர்த்ததோடு அடே சக்கிலியா என்று சபை நடுவே சாதிப்பெயரை கூறி தனது வக்கிரபுத்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
யாருக்கும் யார் மீதும் அரசியல் விமர்சனங்கள் இருக்கலாம். செல்லையா இராசதுரை அவர்களை பார்த்து சிவாஜிலிங்கம் அவர்கள் அரசுடன் இணைந்தாய் அமைச்சராக இருந்தாய் என்று கேட்டிருந்தால் அது நாகரீகமாக இருந்திருக்கும்.
ஆனாலும் அதைக்கூட சிவாஐpலிங்கம் அவர;கள் கூறுவதற்கு எந்தவொரு அருகதையும் இல்லாதவர் ஏனென்றால் சிவாஜிலிங்கம் அவர்களும் அரசாங்கத்துடன் இணைந்திருந்து செய்திருந்த தில்லுமுல்லுகளையும் திருட்டு வேலைகளையும் வரலாறு ஒருபோதும் மறக்கப்போவதில்லை. இன்றும் கூட தமிழ் மக்களின் வாக்குகளை திருடுவதற்காக தமிழ் தேசியம் என்ற மாயமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு பின் கதவால் சென்று அரசாங்க உயர்மட்டபிரதிநிதிகளை திருட்டுத்தனமாக சந்தித்து வருவதை சிவாஜிலிங்கம் மறுப்பாரா?...
தமிழ் தேசியத்திற்காக ஒற்றுமைப்படுங்கள் என்று தமிழ் மக்களை கேட்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர; தமிழ் மக்களில் ஒரு பகுதியினரான துப்பவரவுத்தொழிலாளர;களை இழிவு படுத்தி சக்கிலியா என்று திட்டியிருக்கின்றனர;
புலம்பெயர் தேசங்களில் (சிவாஜிலிங்கத்தின் பாசையிலான சக்கிலி வேலை) செய்து உழைத்து தமிழ் மக்கள் அனுப்புகின்ற தண்டப்பணத்தில் வயிறுவளர்க்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இப்படி வெட்கம் கெட்டு நடக்கலாமா?...
தூ!... காறி உமிழ்கிறது இவர்களது அசிங்கம் கண்டு நாகரீக உலகம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் இவ்வாறான வெட்கம் கெட்ட செயல் கண்டு மானுட சமூகமே தலை குனிகிறது.
இதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வாங்கித்தரப்போகும் உரிமை. இவர்களது அதிகாரங்கள் கையில் கிடைத்தால் இவைகளே இங்கு அரங்கேறும் என்பதற்கு இது ஒரு சாட்சியம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சிவாஜிலிங்கத்தின் அசிங்கத்தை காணொளியில் கவனமாக கேளுங்கள்!