யாழ்ப்பாண நகரில் இன்று காலை இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த படையினரே உயிரிழந்தவர்களாவர்.
சிறிலங்காப் படையினர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கை அடுத்து, ஒருவர் மற்றவரைச் சுட்டுக்கொன்ற பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.