கடற்படை வீராங்கனையை சுட்டுவிட்டு கடற்படை வீரர் தற்கொலை
கடற்படை வீராங்கனையொருவரை துப்பாக்கியால் சுட்ட கடற்படை வீரரொருவர் பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருகோணமலை கடற்படைத் தளத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.இன்று பிற்பகல் 1.30 மணியளவில் டொக்யார்ட் கடற்படைத் தளத்தில் பணியாற்றும் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர். சிறிலங்கா கடற்படையின் பெண் அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொன்றார்.
அதையடுத்து அந்த கடற்படைச் சிப்பாய் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இதுபோன்ற உள்மோதல்கள் சிறிலங்கா படையினர் மத்தியில் அதிகரித்து வருகிறது.
கடந்தமாதம் சாவகச்சேரியில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய்கள் மூவரும், கடந்தவாரம் யாழ்.நகரில் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் இவ்வாறான உள்முரண்பாட்டினால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.