திருகோணமலை முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் நேற்று மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
49 வயதான முகம்மது நஸீர் என்பவரே மின்னல் தாக்கி உயிரிழந்தவராவார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் வாகன திருத்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை புல்மோட்டை பகுதியில் கடலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்து படகில் நின்று கொண்டிருந்த 54 வயதான மீரா நெய்னா சஹாப்தீன் மின்னல் தாக்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.