விடுதலைப் புலிகளின் துப்பாக்கிப்பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவின்; முன்னாள் மேஜர் ஒருவர் வவுனியா பொலிஸ் சுற்றுலா பிரிவால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.28 வயதான அவர் சுப்பையா கிருஷ்ணகுமார் என்ற பெயருடைய ஜீவன் என அழைக்கப்படுபவராவார்.



வவுனியா பொலிஸ் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் திரிந்த இவரைக் கைது செய்து விசாரணை செய்தபோது புலிகள் அமைப்பில் இருந்தபோது வகித்த பங்கு குறித்து வாக்கு மூலம் அளித்துள்ளார்.


மூன்று இராணுவத்தினரையும் மூன்று பொலிஸாரையும் இவர் சுட்டுக் கொன்றுள்ளதுடன் இவரின் கட்டளைப்படி நந்திக்கடல் பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருவதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  



Leave a Reply.

    Kalaikkathir

    The Intelligence Files


UA-27862077-1