வெளிவராத உண்மைகள்
சம்பந்தரை மீறி எதுவும் நடக்காதாம். கூட்டமைப்பு எடுத்த தீர்மானம் இழுபறி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் ஒன்றிணைந்து முன்மொழிந்த ஆரோக்கியமான முடிவுகளை தனது வழமையான பாணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இழுத்தடித்துக் குழப்பியிருக்கின்றார்.(மேலும் படிக்க)
யாழ் அச்சுவேலி கிராமத்தில் தொடரும் கட்டப்பஞ்சாயத்து!
காணி தொடர்பாக விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட வயோதிபர் ஒருவர் கிராமத்தின் தலைவரால் தாக்கபட்டுள்ளார். புத்தூர் மேற்குப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த பொன்னன் கிருபாகரன் என்ற வயோதிபரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.முதுகு, வயிறு மற்றும் பின் பகுதிகளில் அவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளார்.(மேலும் படிக்க)
புலிகளின் முன்னாள் அரசியல் தலைவர்கள், சிங்கக் கொடி ஏந்தியபின் தமிழகம் வருகிறார்கள்!
விடுதலைப்புலிகள் இயக்கத்தால் முன்பு உருவாக்கப்பட்டு, அவர்களது அரசியல் அமைப்பாக செயல்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கையைன் சிங்கக்கொடியை கையில் எடுத்திருப்பது குறித்து இலங்கை அரசு தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கையின் தேசிய கொடியை ஏந்தியது, எமக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டுள்ளதற்கான சிக்னல்” என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
எதிர்க்கட்சி தலைவர் கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற ஹோட்டலில் கைக்குண்டு! மட்டக்களப்பில் பதற்றம்
மட்டக்களப்புக்கு வெள்ளிக்கிழமை ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடைசியாக கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற ஹோட்டலில் கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மட்டக்களப்புக்கு காலை வருகை தந்த ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை 5 மணியளவில் , நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் லயன்ஸ் கழக முக்கியஸ்தர்களை சந்திக்கவிருந்தார்.(மேலும் படிக்க)
வட மாகாண ஆளுனருக்கும் யாழ் அரசாங்க அதிபருக்கும் இடையில் முறுகல்: யாழ் அரசாங்க அதிபர் திடீர் இடமாற்றம்
யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மின் அஞ்சல் வாயிலாக யாழ் அரசாங்க அதிபருக்கான இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் வட மாகாண ஆளுனருக்கும் இடையில் காணப்பட்ட முறுகல் நிலையே இந்த இடமாற்றத்திற்கு காரணம் எனவும் குறிப்பிடப்படுகிறது.(மேலும் படிக்க)
மாகாணசபையை கலைக்க ஜனாதிபதி எடுக்கும் முடிவு தமிழ் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளன.
கிழக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடியும் முன்பே மாகாணசபையை கலைக்க மாண்பு மிகு ஜனாதிபதி எடுக்கும் முடிவு தமிழ் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளன என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.ஆர்.எல்.எப். முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.(மேலும் படிக்க)
விடுதலைப் புலிகளின் துப்பாக்கிப்பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் மேஜர் ஜீவன் நேற்று (10.05.2012) கைது!
விடுதலைப் புலிகளின் துப்பாக்கிப்பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் மேஜர் ஒருவர் வவுனியா பொலிஸ் சுற்றுலா பிரிவால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.28 வயதான அவர் சுப்பையா கிருஷ்ணகுமார் என்ற பெயருடைய ஜீவன் என அழைக்கப்படுபவராவார்.(மேலும் படிக்க)
மாவை சேனாதிராஜா அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதமும் இதுவரை சொல்லப்படாத பதிலும்.
2009 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர; திரு மாவை நேனாதிராஜா அவர்களுக்கு கடிதம் ஒன்று யாழில் உள்ள ஒரு பொதுமகனால் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அந்த கடிதத்தில் எழுதப்பட்ட கேள்விக்கு மாவை அவர்கள் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை என்று அறியப்படுகிறது. இந்த கடித விவகாரம் குறித்த தகவல் எமக்கு கசிந்துள்ளது.(மேலும் படிக்க)
பாணன் பாடிய மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினரின் கள்ளக்காதல் அம்பலம்!
மாநகரசபையின் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் உறுப்பினர் ஒருவர் கள்ளக்காதலில் ஈடுபட்டு வரும் விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. பழம்பெரும் தமிழ் கட்சி ஒன்றின் உறுப்பினரான இவர் தனது மகளின் வயதை ஒத்த இளம் யுவதியை ஆசை காட்டி மோசம் செய்து சல்லாபம் செய்து வரும் காதல் லீலைகளும், காம வேலைகளும் அம்பலத்திற்கு வந்ததே தெரியாமல் தொடர்ந்து தனது கிழட்டுக்காதல் திருவிளையாடலை நடத்தி வருகின்றார்.(மேலும் படிக்க)
ஈ.பி.டி.பி க்கு தாவினார் ரெலோ விந்தன்.
ரெலோ கட்சியின் உறுப்பினரும், யாழ் மாநகரசபை உறுப்பினருமாகிய விந்தன் அவர்கள் ஈ.பி.டி.பி க்கு கட்சி தாவிய விடயத்தை யாழில் இருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளது. (மேலும் படிக்க)